பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

காதல் பாட்டு



பூத்திடும் மலர்கள் தோற்றிடும் வகையில் 
புன்னகை செய்யாதே -நான் 
பார்த்திடும் கணங்கள் பறித்திடும் வகையில் 
மின்னல் ஆகாதே-யாழ்ப் 
பாணத் தமிழில் வரைந்திடும் காதல் 
கவிதை உனக்காக 
ஏழாலை மண்ணின் பசுமைகள் சொல்லும் 
உவமைகள் உனக்காக 
நிலாவரை மிஞ்சும் எந்தன் காதல் ஆழம் 
மாதகல் முரலாய் எந்தன் காதல் மின்னும் !
வரணிப் பானியிலேயான பனங்கட்டி -என் 
உறக்கம் பாதியிலே பறித்தாய் நீ தட்டி 
பிரயாணம் போகையிலே எனைக் கட்டி 
வருமானம் தந்தாயே முத்தக் கட்டி 
சுன்னாகத்து மின்சாரம் உன்னை கடன் கேட்கும் 
சரசாலை மாம்பழத்தின் சுவை தோற்கும்! 
காரைநகர் கடல் போயி காதல் செய்வோம் -எம் 
ஈழத்து சிவன் கோவில் வரம் பெறுவோம் 
மயிலிட்டி சுறா போல் குதிக்காதே -நாம் 
ராஜா போய் வருவோம் முறைக்காதே 

எழுத்துருவாக்கம் 
கவிஞர் அகரமுதல்வன்   




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன், 
ஹரி பாபு.

0 comments: