பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

Showing posts with label கணினி தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label கணினி தொழில்நுட்பம். Show all posts

Wednesday, November 13, 2019

தமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்

கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே! அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறியும் கூகுள் இந்திய மொழிகளுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
Image result for tamil speech to text
தற்போது குரல் தேடல் (Voice search) தயாரிப்பில் தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளையும், சிங்கள மொழியையும் சேர்த்துள்ளது.





இதன் மூலம் தட்டச்சு செய்வதற்கு பதிலாக குரல் மூலமாகவே தமிழில் பேசி தமிழில் தேடலாம்.

மேலும் உங்கள் ஆண்டிராய்ட் மொபைல்களில் GBoard அப்ளிகேசன் மூலம் தமிழில் பேசி தமிழில் தட்டச்சலாம். விரைவில் இவ்வசதி கூகுள் ட்ரான்ஸ்லேட் மற்றும் பிற தயாரிப்புகளில் கொண்டுவரப்படும் எனவும் கூகிள் தெரிவித்துள்ளது.

இது தொடக்கம் என்பதால் குரல் வழி தேடல்/தட்டச்சில் பிழைகள் வரலாம். ஆனா போகப்போக இவ்வசதி மேம்படுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.







மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

உங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?



நம்மில் பலர் கனவு வேலை (Dream  Job) என்று ஏதாவது ஒன்றை நினைத்திருப்போம். ப்ளாக்கர் நண்பன் தொடங்கியதிலிருந்தே கூகுள் மீது எனக்கு அளவுக்கதிகமான காதல். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வதே என்னுடைய கனவு வேலையாக இருந்து வருகிறது.



உலகம் முழுவதும் பரந்துகிடக்கும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். அதில் வேலை பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

கூகுள் நிறுவனத்தில் உள்ள வேலைக்கான காலியிடங்களை Google Careers தளத்தில் சென்று பார்க்கலாம்.



Software Engineer வேலைக்கு கூகுள் நிறுவனம் உங்களிடம் பட்டப்படிப்பை எதிர்பார்க்கவில்லை. மாறாக உங்கள் திறமையை தான் எதிர்பார்க்கிறது. கூகுள் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதற்கு என்ன முறைகளை கையாளுகிறது? அதற்கு நீங்கள் எப்படி தயாராவது? என்பதை இங்கே க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

இது வரை சொன்னது பொதுவான தகவல். இந்த பதிவை எழுத காரணமாக இருந்தது கீழே சொல்ல போகும் தகவல்.





Google's Coding Competitions

கூகுள் நிறுவனம் மூன்று விதமான நிரலாக்க போட்டியினை நடத்துகிறது.

Hash Code

இது அணி நிரலாக்க போட்டியாகும். இதில் இரண்டு முதல் நான்குபேர் வரை ஒரு அணியாக கலந்துக்கொள்ளலாம். இதில் வெற்றி பெரும் அணி 4,000 அமெரிக்க டாலர்களையும், இரண்டாம் அணியினர் 2,000 அமெரிக்க டாலர்களையும், மூன்றாம் அணியினர் 1,000 அமெரிக்க டாலர்களையும் பெறுவர்.

Code Jam

இது தனி நபர்களுக்கான நிரலாக்க போட்டியாகும். இதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் 25 நபர்களை கூகுள் தன் சொந்த செலவில் அமெரிக்காவிற்கு அழைத்து செல்கிறது. அங்கே நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தையும், 15,000 அமெரிக்க டாலர்களையும் பரிசாக பெறுவார்.

Kick Start

இதுவும் தனி நபர்களுக்கான நிரலாக்க போட்டியாகும். இதில் சிறந்து விளங்குபவர்களை கூகுள் நிறுவனமே பணித்தேர்வுக்கு அழைக்கும். இதன் மூலம் கூகுளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Wednesday, April 13, 2016

பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?




    பேஸ்புக் நிறுவனம் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பதை மற்றவர்களைவிட பதிவர்களுக்கு நன்றாக தெரியும். ப்ளாக்கில் பதிவெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பேஸ்புக்கில் மட்டுமே இயங்கி வருகின்றனர். தற்போது பேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் தான் நிரம்பி வழிகின்றது. இந்த பதிவில் பேஸ்புக் வீடியோவை மிக எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

    1. பேஸ்புக் வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
    2. வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Show URL" என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    3. அந்த முகவரியை Address Bar-ல் Paste செய்யுங்கள்.
    4. அதில் www என்பதை நீக்கிவிட்டு m என்று கொடுங்கள்.
    5. புதிய முகவரி இப்படி இருக்கும்.  https://m.facebook.com/whatzupvidz/videos/826508124099459/
    6. இப்போது வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
    7. வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Save Video as" என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Monday, October 26, 2015

ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்


ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெறHTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.


HTTPS என்றால் என்ன?
பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.-Wikipedia
சுருக்கமாக சொன்னால் ஒரு இணையதளத்திற்கும், அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும் முறை ஆகும்.

விரிவாக காண இணைய பாதுகாப்புதொடரை படிக்கவும்.
தற்போது இந்த வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக வழங்குகிறது.மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Sunday, May 4, 2014

கணினி - அடிப்படைத் தகவல்கள்





கணினி அடிப்படைத்தகவல்கள் (Basic information of computer)

கணினி என்பது என்ன?

கணினி என்பது பல எலக்ட்ரானிக் பொருட்களினால் உருவாக்கப்பட்டதாகும். இதில் transistors, capacitors, diodes, resistors இவைகள் அடங்கிய மதர்போர்டு, இவற்றிற்கு மின்சாரத்தை சரியானபடி பகிர்ந்தளிக்கும் SMPS போன்ற சில துணைப்பொருட்களின் தொகுப்பு கணினி. இவ்வாறு பல உறுப்புகளும் இணைந்து உருவானவையே கணினி ஆகும். இவற்றின் மூலம் ஒரு வேலையை தானாகவே, மிக துல்லியமாக செய்து முடிக்கலாம். கணினிகளில் எத்தகை வகை உண்டு? கணினியில் உள்ள உறுப்புகள் என்னென்ன? அவை எப்படி செயல்படுகின்றன? என்பதை தொடர்ந்து வரும் இடுகைகளின் ஊடாக அறிந்துகொள்வோம்.
Operating System:

இந்த இயந்திரத்தை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு உதவுபவைதான் ஆபரேட்டிங் சிஸ்டம். கணினியின் மிக அடிப்படையான ஒன்றாகும். இது கணினியில் அமையப்பெற்ற அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைத்து இயக்குகின்றது. நாம் Application Software களை பயன்படுத்தும்போது அதனோடு ஒன்றிணைந்து அந்த Application Software இயங்குவதற்கு ஒரு மேடையாக இருந்து அவற்றிற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கிறது. இதன் அமைப்பில் உள்ள கட்டளைகளுக்கு ஏற்ப, கட்டளைகளையும், அறிவுறுதல்களையும் CPU க்கு வழங்குவது Operating System.

கணினிகள் எத்தனை வகை இருக்கிறது?

கணினிகளில் நான்கு வகை கணினிகள் இருக்கிறது. அவை:

1. Personal Computers, 2. Mini Computers, 3. Mainfram Computers, மற்றும் 4. Super computers


1. பர்சனல் கம்ப்யூட்டர்

இதில் Destop, Tower, Laptop, hand Held, Network என்ற வகைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன.

2. மினி கம்ப்யூட்டர்

இது ஒரு டிபார்ட்மெண்ட்இல் பயன்படுத்தவது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒரே நேரத்தில் அக்கணினிகளை இயக்க முடியும்.

3. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்

பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் கணினிகள் இவ்வகையைச் சேரும். இவ்வகை கணினிகள் பல ஆயிரம் கணினிக்களை ஒன்றிணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்படுபடுத்தி ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

4. சூப்பர் கம்ப்யூட்டர்: 

நாசா போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுவது. வேகத்தில் அதிவேகமாகவும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரே செகண்டில் செய்யக்கூடியதும் இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஆகும்.

நான் கடந்த பதிவொன்றில் கூறியதுபோல இந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை(ஆங்கிலத்தில் system unit) உடம்பு எனவும், அதை இயக்குகிற Operating System -ஐ உயிர் எனவும் கணினி வல்லுநர்கள் அழைக்கிறார்கள். Operating System System இல்லை என்றால் System unit இயங்காது. இவ்வியந்திரத்தினுள் உள்ள உறுப்புகளை Hard Ware எனவும், அதை இயக்குகிற Operating System, அதனுடன் தொடர்புடைய மற்ற Application Software களை மென்பொருள் எனவும் அழைக்கிறோம்.

அதாவது CPU என்றழைக்கப்படுகிற பெட்டியினுள் உள்ள பாகங்கள், கீபோர்ட், மௌஸ், கணினித் திரை ஆகிய அனைத்தையும் Hardware என்கிறோம். அந்த HARDWARE சாதனங்களை கட்டளைகளால் இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத மென்பொருள்களை Software என்கிறோம்.

இந்த அளவுக்கு குழப்பியது போதும் என நினைக்கிறேன்.

சரி உண்மையிலேயே உயிரற்ற இந்த சாதனைங்களும் உயிர்ப்பிக்கிற சாப்ட்வேர்களும் உயிரற்றவைதானே.. இவை எப்படி மனிதன் சிந்திப்பதுபோல சிந்தித்து மற்ற பாகங்களுக்கு கட்டளைகள் இடுகின்றன என்கிறீர்களா??....நாளை பார்ப்போமே...!

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

1500 ரூபாயில் ஒரு இணைய தளத்தை உருவாக்க முடியுமா?



Low cost web design at Rs.1500/- only

ரூபாய் ஆயிரத்து ஐநூறுக்கு ஒரு புதிய வலைத்தளத்தை ஆரம்பிக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல வேண்டும். 

எப்படி? 

வலைத்தளத்தை (Website Creation) உருவாக்குவது முற்றிலும் இலவசமே..!
அதற்கு பிளாக்கர், வேர்ட்ப்ரஸ் (Blogger , Wordpress) தளங்கள் உதவுகின்றன. 
இலவசமாக கொடுக்குத் இத்தளங்களை உங்கள் சொந்த தளங்களாக மாற்றம் செய்வது எப்படி? 
நீங்கள் இதற்காக டொமைன் பெயரை (Get Domain Name) விலைகொடுத்து வாங்க வேண்டும். 
low cost web design at Rs. 1500/-

டொமைன் பெயர் எங்கு வாங்கலாம்? 

இணையத்தில் பல்வேறு தளங்கள் (Domain, Hosting Providers) டொமைன் பெயரை வழங்குகின்றனர். 
டொமைன் பெயரைப் பெற்றுக்கொள்ள நீங்கள் உங்கள் முகவரியைப் பயன்படுத்தி உங்கள் பெயரிலேயே வாங்கிக்கொள்ள முடியும். 
எப்போது வேண்டுமானாலும் அதை நீங்கள் அணுக முடியும். 
சரி.. அப்படியென்றால் 600 ரூபாய் செலவழித்தாலே நல்லதொரு வலைத்தளத்தை பெற்று விட முடியும். மீதம் தொள்ளாயிரம் ரூபாய் 900 எதற்கு என்கிறீர்களா? 
இங்குதான் நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். வலைத்தளம் ஆரம்பிப்பவர்கள் அனைவருமே பிரபலமாகிவிட மாட்டார்கள். உலகளவில் பிளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்கள் தமிழில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் உள்ளன. இது 2010 ஆம் ஆண்டின் கணக்கின் படி. தற்போதைய சூழலில் ஒரு லட்சம் தமிழ் வலைப்பதிவுகள் இருக்கலாம். (தமிழ் தளங்களின் ஒப்பீட்டின்படி மட்டுமே இந்தக் கணக்கு). 

ஒரு லட்சம் தமிழ் வலைப்பூக்கள்

இதுவே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் இயங்கும் வலைத்தளங்கள், வலைப்பூக்களுக்கு மத்தியில் உங்கள் வலைத்தளத்தையும் தரமான வலைத் தளமாக , அனைவருக்கும் தெரியும் பிரபலமான வலைத்தளமாக மாற்றி, உங்கள் கருத்துகளையும், நிறுவனங்களின் தயாரிப்புகளையும், வியாபாரங்களையும் உலக அளவில் முதன்மைப்படுத்த முடியும். 
ஒரு லட்சம் வலைப்பூக்களில் (million blogs) உங்களுடைய வலைப்பூவை பிரபலப்படுத்தவும், உங்களுடைய வலைப்பூ முதன்மை பெறவும் ஒரு சில தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டியுள்ளது. 
பலருக்கும் பயன்படக்கூடிய உங்களுடைய வலைத்தளம் மற்றவர்களின் பார்வைக்கு (do popular as a website your blogger blog) கிடைக்க வேண்டாமா என்ன? அதைச் செய்வதற்கும் நீங்கள் மிகச்சிறிய கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். 
இலவசமாக கிடைக்கும் மூன்றாந்தர வலைப்பூ வார்ப்புருக்களைப் (Third Party Blogger Blog Templates) பயன்படுத்துவதால், அதை உருவாக்கிக் கொடுத்தவர்களுக்கு அதில் நன்மை கிடைக்கும்படிதான் வார்ப்புருவின் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஏனென்றால் ஒரு பொருளை இலவசமா யாருமே கொடுக்க முன்வர மாட்டார்கள். அப்படி இலவசமாக கொடுப்பதால் நிச்சயம் அவர்கள் நஷ்டபட வேண்டியிருக்கும். 
ஒரு வார்ப்புருவை உருவாக்க பல மணி நேரங்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ஒரு வார்ப்புரு முழுமையான வடிவத்தை கொடுக்க ஒரு வார காலம் கூட மெனக்கெட வேண்டியிருக்கும். ஒரு வார்ப்புருவை உருவாக்குவதில் அத்தனை சிக்கல்கள் உண்டு. 
சாதாரணமாக எந்த ஒரு முட்டாளும் இலவசமாக ஒரு பொருளை கொடுப்பதற்கு முன்வர மாட்டான். முட்டாளே அப்படி இருக்கும்பொழுது, புத்திசாலியாக இருக்கும் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். கண்டிப்பாக இலவச வார்ப்புருக்களால் அவர்கள் நன்மையே அடைவார்கள். (ஒரு சில மூன்றாம் தர வலைப்பூ வார்ப்புருக்களில் மால்வேர்  போன்ற சங்கதிகளும் உள்ளடங்கும்.)
அவ்வாறில்லாமல் நீங்கள் விரும்பியபடி, உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட வலைப்பூவின் வார்ப்புருவை தனித்துவப்படுத்தி கொடுப்பதே எங்களுடைய மிக முக்கியமான வேலை. அல்லது எங்களின் சொந்த வார்ப்புருவை உங்களுக்கு உருவாக்கி கொடுக்கிறோம். 
இந்த இரண்டிற்கான வேலைகளைச் செய்யவும், உங்களுடைய வலைப்பூவை மேம்படுத்திக் கொடுக்கவும், ஒரு தரமான வலைப்பூ எப்படிப்பட்ட கட்டமைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், வலைப்பூவில் எழுதுவது பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும், தேவையான குறிப்புரைகள் வழங்கி உங்களை ஒரு வெற்றிகரமான வலைப்பதிவராக உருவாக்குவதற்கும் நீங்கள் கொடுக்கும் மிகச்சிறிய தொகையே அது. இவை அனைத்துமே உங்கள் விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்படும். இது கட்டாயமல்ல.. 
ஆக ஒரு வலைத்தளத்தை ஒரு மிகப்பெரிய இணைதளத்தைப் போன்று  வடிவமைக்கவும், அதில் மாற்றங்களைச் செய்து கொடுக்கவும், நீங்கள் கொடுக்கும் மிகச்சிறிய தொகையே அது. 
இப்பொழுது சொல்லுங்கள்... உங்களால் ஒரு வலைத்தளத்தை ரூபாய் 1500 க்கு ஆரம்பிக்க முடியும்தானே..! மேலதிக கூடுதல் வசதிகளைப் பெறவும், வலைத்தளத்தில் முக்கியமான பணிகளைச் செய்யவும் நீங்கள் கூடுதலாக தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம்.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.








சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.

இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Wednesday, May 9, 2012

பென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி






USB Device களை பயன்படுத்தும் போது நமக்கு இருக்கும் அவசரத்தில் நம்மால் Safely Remove என்பதை செய்ய முடிவதில்லை. பலர் அதனை மறந்தும் விடுகிறோம். இதனால் உங்கள் பென் டிரைவ் போன்ற USB Device-கள் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே சமயம் உங்கள் பென் டிரைவ்க்கு எந்த பிரச்சினையும் வராமல் எப்படி உடனடியாக Remove செய்வது என்று பார்ப்போம். 


1. முதலில் உங்கள் பென் டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணினியில் செருகவும். 

2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும். 

3. இப்போது உங்கள் கணினியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். (பெரும்பாலும் நிறுவனத்தின் பெயரோடு இருக்கும்.) கீழே உள்ளது போல. 


4. அதன் மீது Double Click செய்யவும். 

5. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் "Quick removal (default)" என்பதை தெரிவு செய்யவும். (ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருந்தால் பிரச்சினை இல்லை). 


Windows XP-உள்ள கணினிகளுக்கு இது கீழே உள்ளது போல இருக்கும். 


அவ்வளவு தான் நண்பர்களே, இனி நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன்,  உங்கள் பென் டிரைவ் போன்றவற்றை Safely Remove கொடுக்காமலேயே Remove செய்ய இயலும்.  இதனால் உங்கள் பென் டிரைவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 


Read more: http://www.karpom.com/2012/05/remove-quickly-remove.html#ixzz1uNm6Ylpe

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி: