உயிருள்ள
வார்த்தைகளை
உன் உதடுகள்
உதிர்க்கட்டும்!
உயர் கலை
சிற்பங்களை
உன் விரல்கள்
செதுக்கட்டும்!
உன்னத
சிந்தனையை
உன் இதயம்
சுமக்கட்டும்!
உலகம்
உள்ளவரை
உன் பெருமை
பேசட்டும்!
காலம்
உள்ளவரை
உன் கண்கள்
தேடட்டும்!
பூமி
உள்ளவரை
புன்னகை
பூக்கட்டும்
எழுத்துருவாக்கம்
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்டன்,
ஹரி பாபு.








0 comments:
Post a Comment