பெயரறியாப் பழமொன்றைக்
கையில் பிடித்தபடி நிற்கிறாள்
முந்தானை நழுவிய
பெண்ணொருத்தி,
என் அறை சுவற்றில்...
பெயரறியா பழமோ,
நழுவிய முந்தானையோ
அள்ளிக்கொள்ளாத என் கவனங்களை
மிகக் கவனமாய் சேகரிக்கின்ற
அவளின் கண்களில்
என்னை பார்த்துச் சிரிக்கிறான்
அவளின் பிரம்மன்...
- ராம்ப்ரசாத் சென்னை
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).








0 comments:
Post a Comment