பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Saturday, April 14, 2012

ஈகரை கவிதை போட்டி - கவிதைகள்




காதல்

என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்


யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...


வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..


உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..


என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்

என்றும் காதலாய் நீ .....

என்றும் காதலாய் நீ .....

பார்வைகள் ஒன்றோடொன்று
சந்தடியின்றி மோதியபோதும்...
சின்ன சின்ன உரசல்கள் வந்து 
வெட்டி ஒட்டிய போதும்...
என்றும் காதலாய் நீ...

காரிருளாய் துன்பங்கள்
கனவுகளில் மிரட்டியபோதும்
நினைவுகளில் விரட்டியபோதும்....
வற்றாத ஜீவநதியாய்
என்வாழ்வை வளமாக்கினாய்
என்றும் காதலாய் நீ...

என் தனிமைநோய்க்கு 
அருமருந்தாய் அமுதமானாய்
மூச்சு முட்டிய நாளில் 
உயிர்க்காற்றாகி நின்றாய்
உடலும் மனமும் 
சோர்ந்திருந்த போதெல்லாம்
காதல் தீ மூட்டிநின்றாய்
என்றும் காதலாய்..


 என் பார்வையில்!


எதுவாவது கொடுத்தாலே 
என்னைப்புகழும் 
என் உறவினர்களுக்கிடையில்
எதுவுமே என்னிடம்
எதிர்பாராமல் அன்பை வாரிக்கொட்டி
என்னை உயிரூட்டம் கொள்ளவைத்த
என்னருமை களஞ்சியமிது!






யாகாவாராயினும் நாகாக்க
எனும் உயரிய தத்துவத்தை
எடுத்துரைத்து 
அன்பைக்கொடு
எடுத்துக்கொள் அரவணைப்பை
கருத்துக்களை வை
கலந்துகொள் ஜோதியில்...

காதலென்னும் தேர்வெழுது


எல்லா உடல்களும் 
ஏன் உன் முகம் சுமக்கிறது?
பாகற்காயும் வேம்பும்
ஏன் கற்கண்டாய் சுவைக்கிறது?

உன் மேல் எனக்கு 
காதல் தொடக்கம்
உன் காதல் ஒப்பந்தத்தில்
என் அயுள் அடக்கம்

பெண்ணே !
நீ எம்மதம் என்று
கேள்வியில்லை
உன் சம்மதம் மட்டும் போதும்.
அப்போதுதான் பெண்ணே
நான் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
நுரையீரல் போகும்

சொர்க்கம் நரகமெல்லாம்
சமயவாதிகளின் கணக்கு
சத்தியமாய் அதிலெல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு

எதிர்பார்த்த நொடியில்
உன் தரிசனம்-சொர்க்கம்





தமிழ் சமுதாயம்


இந்தியாவில் முதலில் புரட்சியை ஏற்படுத்தினேன் அப்போது
ஆனால் ஒருவர் மனதிலும் கூட இல்லை இப்போது!

அனைவருக்காகவும் பாதுகாப்பாக இருந்தனர் எனது காவலர்கள் அப்போது
ஆனால் அமைச்சர்களுக்காக மட்டும் இப்போது!

மனுநீதியை வழங்கினார் மனுநீதி சோழன் அப்போது
ஆனால் மனு மட்டும் இருக்கிறது இப்போது!

தமிழில் கவிதைகள் பிறந்தது அப்போது
ஆனால் ஆங்கிலத்தை கலந்துவிட்டனர் இப்போது!

வாழ்க்கைகாக இருந்தது திருக்குறள் அப்போது
ஆனால் தேர்வுக்காக மட்டும் இப்போது! 

இன்றைய அரசியல் நிலை ..,

சூது வாது தெரியா 
முன் தலைமுறைகள்,
சுட்டது யாரு என 
தெரியா தவளைகள்,
பட்டென்று சொன்னால் 
புரியாது 
பட்டால் கூட 
அறியாது .

திரையில் பார்த்த 
அதிசியம் 
ஓட்டு கேட்டுவந்தால் 
துடித்திடும்.
சூது வாது தெரியா 
முன் தலைமுறைகள்,

கட்சி என்று வந்துவிட்டால் 
தம்பி என பார்க்காது 
கொலை கூட செய்ய 
தயங்காது ,
சூது வாது தெரியா 
முன் தலைமுறைகள்,

எந்த கட்சிகாரனும் 
நல்ல தலைவர் 
யார் என கேட்டால்
காமராசு என 
சொல்ல தயங்காது .
சூது வாது தெரியா 
முன் தலைமுறைகள்,

சொன்ன...


அரசியல் வீண்


வீண்அரசியல்
அரசியல்வீண்


துஸ்டர்களின்
களம்
துரோகம் தேக்கி நிற்கும்
குளம்


சுயநலத்தின்
உச்சம்
கொலை களவு பழியுணர்வின்
எச்சம்.


இல்லாமல் இருத்தல்
அவசியம்-
கட்சியின் கொள்கை
உயிர் மூச்சான லட்சியம்
இயன்றவரை கொள்ளை


பலர் நம்பி
முதலீடும் செய்யும்
நவீன வியாபாரம்.
நற்பேர் நிச்சயம் கூடாது
வேண்டுமதில்
அதிகபட்ச சேதாரம்


இனி
திருத்தவே முடியாதது
இந்திய அரசியல்.
அதைப் பற்றி
பேசுவது… 
எழுதுவது…...
...





தமிழா.. .! தமிழ்டா. . .!

உனக்குமட்டும் 
தாய்மொழியல்ல தமிழ்
உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழியும் தமிழ்தான்.

ஆனால். . .இன்று. . .
சமசுகிருதம்-இந்தி
ஆங்கிலம் போன்ற
நச்சு வாயுக்கள்
நற்றமிழ் தென்றலில்
கலந்துவிட்டமையால்
முத்தமிழுக்கும்
மூச்சுத்திணறல்.

விபத்து குறித்து 
கவலை வேண்டாம்
ஏனெனில் 
தாய்மொழி தமிழுக்கு 
ஒரு தீங்கும் நேராது
வரலாற்று மொழியதற்கு 
குறையொன்றும் வாராது

எது எப்படியோ. . 
தன்னைச் சுற்றியிருக்கும் 
சூழ்ச்சியைத்
தாய்த்தமிழ் விரைவினில்

குட்டி உலகம்


தத்தித் தவழும்
தூய தமிழ்
மூச்சு விடும்
தங்கச் சிமிழ்

அழகின் 
உருவ வடிவம்
மாந்த இனத்தின்
கலங்கமற்ற படிமம்

இன மத மொழி
அடையாளங்களை
புறக்கணிக்கும்
படைப்பு
கனமான சோகத்தையும்
உடைத்தெறியும்
பொக்கைவாய்ச் சிரிப்பு

குழந்தைகள். . .
மனத்தில்
துகளளவும் இருக்காது
கலகம்.
அவர்கள்
அன்பின் அச்சில்
சுழலும்
ஒரு குட்டி உலகம்

-புதுவைப்பிரபா-



காதலை கொண்டாடு !
காதல்
எது காதல் ?
காகிதம் முழுவதும் 
பெயர் எழுதிவருவதா 
காதல்.
கால்வலிக்க நின்று 
அவள் வருகைக்கு 
வரவேற்ப்பு தருவதா 
காதல்!
பள்ளிக்கு செல்லாமல் 
அவள் துணைக்கு 
சென்றுவருவதா 
காதல் !
தானே வறுமையில் வாட
வாழ்த்து சொல்ல திருடுவதா 
காதல் 
பெண்ணை கண்டவுடன் 
வருவதா 
காதல்!
கொண்டகாதல் 
வந்தவழி போனால் 
அடுத்த காதல் 
கொள்ளுவதா 
காதல் !
காதல் என்பது 
அன்பின் வழிபாடு 
தாய்மையின் மனதோடு 
தந்தையின் பாசத்தோடு 
சகோதர்களின் பிணைப்போடு 
சகோதரிகளின் இணைப்போடு 
சொந்தகளின்...


வாமனம்

[size=25]வாமனம் 
[/size]

மேசை மேலிருந்த பூந்தொட்டி 
குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை 
அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள் 

அடுக்கிவைத்த புத்தகங்கள் 
கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த 
தொலைபேசி இணைப்பு 

கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி 





நகைச்சுவை கவிதை


ருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….


Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி… ஹி…. ஹி…..
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்……










ஈழத்தமிழன்



பிறக்க வேண்டும் ஒரு புது புரட்சி !
உரக்க வேண்டும் நம் தமிழுணர்ச்சி!


கேட்க கேட்க கிடக்கவில்லை!
தட்ட தட்ட திறக்கவில்லை!
அமைதிக்கு அங்கே வேலையில்லை!


இடிப்போம் !
ஆணவ நடை ஓடிப்போம்!
நம் உரிமைகளை எடுப்போம் !


சுதந்திர தேன் குடிப்போம் !
அடிமைத்தனம் ஒழிப்போம்!
உலகுக்கு புகழ் உரைப்போம்!


எழுங்கள் எழுங்கள் இனி பொறுமையில்லை.
எடுங்கள் எடுங்கள் கையில் ஒற்றுமையை.
போவோம் போவோம் நன் களம் நோக்கி !


நாம் தமிழன் என்று வான்பிளக்க ஒலிக்கட்டும்!
உலகில் தமிழன் தலை நிமிரட்டும் !
வாரிசுகள் ஆளுமையுடன் பிறக்கட்டும்...









எல்லாம் உன்னாலே - தமிழ்






அன்னையின் அடிவயிற்றை
உந்தி வந்த முதற்கொண்டு
முந்தி வந்த சொற்களெல்லாம்
உன்னாலே உன்னாலே

ஆரம்பபள்ளி முதல்
அருங்கணித, அறிவியலும்
ஆறாத வரலாறும்
அறிந்து தெளிந்ததெல்லாம்
உன்னாலே உன்னாலே

கண்ணிலே காண்பதுவும்
காதிலே கேட்பதுவும்
கணத்திலே அர்த்தமாகி
மனத்திலே பதிவாகும்
உன்னாலே உன்னாலே

பொருள் விளங்கி ஏற்ப்பதுவும்
பொருள் விளக்கி ஆற்றுவதும்
பொறுப்புணர்த்த...




கொடுக்கும் யாவும்..


கொடுக்கும் யாவும்.. 


நீ
எதைச்
செய்து 
கொடுத்தாலும்
அது 
கலப்படம்
ஆகிவிடுகிறது

உன் 
அழகிய
காதலும்
கலந்து.



தமிழ்ச் சமுதாயம்

ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும்...

குழந்தைகள்

ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும்...


காதல் என்பது ஒரு கடல்

காதல் என்பது ஒரு கடல் ...அதில்
மூழ்கி கவில்ந்தவர்கள் வீசப்படுகிரர்கள் ....
நீந்தி கடந்தவர்கள் பேசபடுகிறாகள்.........ஆயினும்
ஆயிரம் இதயங்கள் அதன் கரையில் ...........



சமகாலர்களே!

சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் ம‌ட்டும‌ல்ல‌ என் பேனாவும்
உங்க‌ளுக்காக‌ குனிவ‌தாயில்லை
நான் உர‌க்க‌ சொல்லும் உண்மைக‌ளை உர‌சிப்பார்க்கும்
துணிச்ச‌ல் உம‌க்கிருந்தால்
உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..
உம‌க்கும் ம‌ற்றெந்த‌ மிருக‌த்துக்கும் வித்யாச‌மிருக்கிற‌தா என்று.
தொட‌ர்ந்து போர்த்த‌ப்ப‌ட்ட‌ துணிகள்
உம் உரோம‌ங்க‌ளை ச‌ற்றே குறைத்திருக்க‌லாம்.
டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட‌ உண‌வு
உங்க‌ள் மோப்ப‌த்திற‌னை ச‌ற்று குறைத்திருக்க‌லாம்.
பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உற‌வு உங்க‌ளிலான‌



விடலை பருவத்தின். கட்டாய கல்வி. காதல்!


காதல்!
தட்சணை இல்லாத 
திருமணம்.


காதல்!


பிரச்னை கொண்டு 
வலம் வரும் .


காதல் மேல் 
காதல் என்பதால் காதல் .

காதல்!
விடலை பருவத்தின்.
கட்டாய கல்வி.

காதல்!
தேவை என்று 
வேதனையை தேடுபவர்கள்.

காதல்!
பந்தத்தை துறந்து 
சொந்தம் கொண்டாடுவது .

இந்த காதல் 
தேவையா என்பதைவிடா,
கொண்ட காதலை 
கொண்டவரை கண்டால் 
உண்மை புரியும் .
உன்னைத் தெரியும்.





என்னவள்


நட்சத்திரங்கள் அவள் 
கண்ணொளியில்
தெறித்த முத்துக்களாயின. 
மேகங்கள் அவள் 
கூந்தலிருந்து விடுபட்டன. 
முழுநிலவு அவள் புன்னகையிலிருந்து
முகச்சாயம் இட்டுக்கொண்டது. 
தினந்தோறும் 
விழிகளில் அவள் 
விழ வேண்டி 
இமைகள் நியூட்டன் ஆக காத்திருக்கும்.




காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)

வழக்கம்போல் இன்றும் அலட்சியமாய் நகம் கடித்து துப்பாதே ..

உலகம் குழம்பிப் போதும்..

இன்று மூன்றம்பிறை என்று .....



"வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..

இப்போதாவது கேள் ..

தலை பிண்ணி வெளியே செல்..


காதல் வசப்பட்டது உண்மை என்று ,



இரவை ரசிக்கமுடியவில்லை ,
நிலவை பிடிக்கவில்லை ,
பகலை பார்க்க மனமில்லை ,
மலரை அணைக்கவில்லை ,
மன்னனாய் நீ வந்த பின் 
எதுவும் ரசிக்கமுடியவில்லை .
இது தான் காதல் என்றால் 
உனக்கும் இருக்கும் 
என நினைக்கிறன் ,
உன் வருகைக்காக 
துடிக்கிறேன் 
துடிக்கவைப்பதில் 
ஆணுக்கு சுகமா ?
நீவும் அந்த ரகமா ?
ஏன் மௌனமாய் 
மொழி பேசுகிறாய் ?
செம்மொழி அறிதேவனே!
சொல் ஒரு முறை 
காதல் மொழியில் ,
நானும் காதல் உன் மீது,
காதல் வசப்பட்டது 
உண்மை என்று ,
காதல் எழுதி காத்திருக்கும் 
காதலிக்கு ..




காதலின் வினை ,கடந்த பின் தெரியும்.

உண்மைக்காதல்
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .
எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட வாழ்க்கைக்கு
வாழ்கைப்பட்டோம்.
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதில்லுறைத்து
ஆட்சி புரிகிறோம் .
காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்
ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .
கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.


என் மகனே உலகம் உன்னை பேசும்..



என் மகனே
பார் இந்த உலகத்தை
இமைகள் விரித்து பார்.
பயந்து போகாதே
தோல்விகளின்
பட்டியலை கண்டு .
வியந்து போகாதே
வெற்றியின்
உயரத்தை கண்டு .
சாதிக்க நினைத்தவனே
காதலை நினைக்காதே
காதலிக்கும்
வயது இப்போதிக்கு
இல்லை உனக்கு ,
சாதிப்பதே உன் கணக்கு ,
நீ வெல்வத்ருக்கு
நிறைய இருக்கு .
பார் கண் திற்நது பார்.
விண்வெளின் விலாசம்
வாங்கலாம்
கிரகங்களுக்கு
சென்று ஆராயல்லாம்,
அங்கு இளைப்பாறலாம்.
வெற்றிக்கொடி என்றும்
உன்கைகளில்தான்
புரிந்தால்
உலகம்...



கடைசி ஆசை…


அன்பே...
ஏன் பிரிந்தாய்?
நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய்?
நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்
நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்.
சொல் கண்ணே சொல்…

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்

வாழலாம்.

எங்கே நீ சொல்
அன்பே சொல்..
உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு...



இயற்கையை மீது காதல் 
இயற்கையை திகைக்கிறேன் !
நினைவிலே நினைக்கிறேன் !

வானவில் ரசிக்கிறேன் -அதன் 
வண்ணங்களை வியக்கிறேன் 
எத்ததனை ஒற்றுமை
ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது யாரோ !

தூரத்து வெண்புள்ளி 
நிலவென்று சொன்னார்கள் 
பாட்டியும் வடை சுட்டலோ!
அம்மாவிடம் ஏமாந்தேன் 
நினைக்கிறேன் சிரிக்கிறேன்.

நட்சத்திர கூட்டங்கள்
இயற்கையின் தோற்றங்கள் !
கற்பனை உருவங்களை 
அதன் வழி கண்டேனே !
அழகுதான்! அது அழுகுதான்!

செந்நிற வானம் 
மாலையில் காண்கிறேன் 
சிவந்த சூரியன் கண்டு




என் காதல்…


நீண்டநாளின் பின் எழுதும்
காதல் கவிதை இது
காதலியே நீ புரிந்திடு.. காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவது தான்
எனது பொழுது போக்கல்ல
பார்த்த விநாடியில் பத்திக் கொள்ள
என் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல்
போனதும் புரியாமல் விட
இது மின்னல் காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்து கொண்ட நம்காதல்
புனிதமான உண்மைக்காதல்…
 



எனக்குப் பிடித்தவளாக நீயும்
உனக்குப் பிடித்தவனாக நானும்
என்றும் இருக்கின்றபோது
எதற்காக என்னில் மற்றோர்போல
வீணாக சந்தேகம் கொண்டு
வெண்ணிலவே...



வடிந்தோடும் கண்ணீருடன்



வானவில் சிலநிமிடம்
வந்து போகும்
வசந்தமாய் சில நிமிடம்
வளர்பிறை தேய் பிறை
வாழ்க்கையின் வடிவம்
வருத்தமும் தேர்ச்சியும்
வளர்ச்சி தரும் ஒர்வடிவம்
வாட்டத்தின் அரசாட்சி
வாட்டிவதைக்கும்–சிலகணம்
வந்து வாழ்ந்த உறவை
வாவென்று கையுடன்அழைத்து செல்லும்…
வண்ணக்கனவுகளும் கலைந்து போகும்
வான்முகிலுடன் கைகோர்த்து
வசைபாடி இழுத்து செல்லும்
வார்த்தையில்லை வேதனைகளுடன்
வருத்தங்களை பகிர்ந்து கொள்ள
வருந்துகின்றேன் வடிக்கின்றேன்
வடிந்தோடும் கண்ணீருடன்
வாழ்வில் உமக்கு
வருடிக்கொடுக்க எங்கள்
வஞ்சகமில்லா கரங்களும்










யாதும் ஊரே யாவரும் கேளீரோ? 


(வேற்று மாநிலகாரர்களாக பிறப்பது தவறுமில்லை, அது தோன்றிய / தோற்றிவித்த காதலின் தவறுமில்லை).



என்றும்
நமக்காகவும் 
நம் காதலுக்காகவும்
எதை வேண்டுமானாலும்
இழப்பேன், செய்வேன் - எப்பொழுதும்
முனைவதற்கும் ஆயத்தமாய்.


ஆனால்



***** தமிழ் *****



"என்தாயும் நீயே!
என்தோழியும் நீயே!
என்காதலியும் நீயே!
என்மனைவியும் நீயே!
என்சேயும் நீயே!
என்வாழ்வே நீயே!!!"

எனக்குமட்டும் என்றில்லை 
எத்தனையோ உள்ளங்களுக்கும்...

இவன்,



நிலா



நின்ற நிலையில் அசந்து போனேன்..
நிலவொன்றை நிலத்தில் கண்டதனால்...








காதலி சொல்லும் காதல்.

காதலனே!
உன் கண்கள்
பருவ நெருப்பில்
வாட்டிய வாளை
போல சிவந்துருக்கு .
அது என்ன
உன் புருவத்தில்
இத்தனை பூகம்பம்.
நீ விடியலை நோக்கும்
சூரியனா .
இதனை வெளிச்சம்
தருகிறதே .
உனக்குள் இத்தனை
பரிமானங்களா ?
ஆணின் வெற்றிக்கு
பின் பெண் என்பது
உண்மை.
அது நானாக இருந்தால்
மகிழும் இந்த
பெண்மை.
நீ, என்னை ,
கடந்து போகும் போது
உன் வாசமும் ,
சுவாசமும் ,என்னை
உன் வசமாகியது.
தன் காதலை எந்த
பெண்ணும் முன்னுரைபதில்லை
ஆனா
நான் சொல்கிறேன் என் காதலை
ஏற்றுகொள்வாயா என் கடித்தை.
என்...

காதல்......!




காதல் இனிமையானதா? - இல்லை இல்லை 


காதல் துயரமானதா? - இல்லை இல்லை 


காதல் புதுமையானதா? - இல்லை இல்லை 


காதல் புதிரானதா? - இல்லை இல்லை 


காதல் கண்ணியமானதா?- இல்லை இல்லை 


காதல் காமமானதா? - இல்லை இல்லை 


காதல் பவித்ரமானதா - இல்லை இல்லை 


காதல் நிம்மதியானதா? - இல்லை இல்லை 


காதல் சுகமானதா? - இல்லை இல்லை 


காதல் சுமையானதா? - இல்லை இல்லை 




பிறகு எதுதான்...
நட்பு
நட்பு
எங்கோ ஜனித்து வளர்ந்த
முகமறியா நம்முள்
முகிழ்த்த இந்நட்பு
எங்ஙனம் சாத்தியமென
எண்ணியெண்ணி வியக்கிறேன்...
இணையத்தின் அரிய
சாதனைகளுள் இதுவும்
ஒன்றென்று எண்ணுகையில்...
பேனா நட்பென
வண்டின் தேனுண்ட
மலர் காயாகி
கனியும் காலம்
வரையான காத்திருப்பாய்
ஒரு கடித வரவுக்காய்
காத்திருந்த...






உயிர் காதலன் 


என்னவளே கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே !
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது
உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே !
உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே !
நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் உயிர் காதலன்!!!!!!!!!!!!!!!!!!!!















காதல்



ஒரே பார்வையாள் 
உள்ளம் சென்று உணர்வை சுமந்து 
உதிரவளம் வருகின்றாள், 


ஒரே வார்த்தையாள் 
என் உடல் பொருள் ஆவியில் 
பாதியாகிறாள் 


ஒரேசிரிப்பில் 
என் உயிருக்குள் ஒரு கோடி மலர்களை 
உதிர்ந்து விடுகிறாள்,


ஒரேமரனத்தில் 
என் ஏழு ஜென்மத்தின் வாழ்க்கையினை 
முடித்துச்செல்கிறாள்.


அன்புசெல்வன்









நாங்கள்

விறகு 
எரிகிறது 
கடைசியில் 
கரிக்கட்டை
-அறுசுவை உணவு 


வெள்ளி குத்துவிளக்கு 
எரிகிறது 
பிரகாசமாய் 
தெரியவில்லை
-விளக்குத்திரி


அழகிய கவிதை 
அனைவரும் பாராட்டினர் 
நான் எழுதிய கவிதை 
ஆணவம் 
-பேனாவிற்கு






காதல் காவியம் 








ஜன்னல் காற்று !!
என் உலகம் !!
தித்திப்பு !!
உயிர் !!
வேண்டுகோள் !!
மகிழ்ச்சி !!
புன்னகை பூ !!
கடல் வண்ணம் !!
அதிசயம் !!
முத்தங்கள் !!
பட்டிமன்றம் !!
வைர மெட்டி !!
போர்வைக்குள் நீ !!
சிக்கி கொண்டேன் 
உன் உருவம் 
கடற்கரை காகிதம் 
உன் சிரிப்பில் 
காதலனின் கற்பனை 
வெட்கம் 
கனவுகளும் கவிதைல்களும் 
மனதின் அதிர்வுகள் 
என் பேனாவின் நாணல் 
உன் நினைவுகள் 
கண் விழித்தேன் 
உன் பிரிவு

எந்த அளவுக்கு பிடிக்கும்

உன்னை 


எந்த அளவுக்கு 


பிடிக்கும் என்று 


தெரியவில்லை …


அனால் !


உன்னை 


பிடித்த அளவுக்கு 


இந்த உலகத்தில் 


வேறு எதுவும் 


எனக்கு பிடிக்கவில்லை …

0 comments: