கல்லடிபட்ட நாயாகவே
அலறிய படி ஓடிக்கொண்டிருக்கிறது
மனசு !
முடிவுகள் முரணாகுமோவென்ற
அச்சத்திலேயே
முடிச்சுகள் அவிழ்க்கபடாமலிருக்கின்றன!
நள்ளிரவின் அமைதியை
நண்பகலில் கூட உணரமுடிகிறது,
சத்தங்கள் அற்று கிடக்கும்
எனது
பகல்ப்பொழுதுகள் !
எச்சிலினால் வலை பின்னி
இரை காணும்
சிலந்தி !
எனை பார்த்து சிரிக்கிறது
நம்பிக்கை இல்லாதவன் என ?
நான் ஒரு அறையின் மூலையில்
முடிச்சுகளோடு
முரண்பட்டபடி ..........
எழுத்துருவாக்கம்
கவிஞர் அகரமுதல்வன்
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.








0 comments:
Post a Comment