பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

முடிச்சுகள்



கல்லடிபட்ட நாயாகவே 
அலறிய படி ஓடிக்கொண்டிருக்கிறது 
மனசு !

முடிவுகள் முரணாகுமோவென்ற 
அச்சத்திலேயே 
முடிச்சுகள் அவிழ்க்கபடாமலிருக்கின்றன!

நள்ளிரவின் அமைதியை 
நண்பகலில் கூட உணரமுடிகிறது, 
சத்தங்கள் அற்று கிடக்கும் 
எனது 
பகல்ப்பொழுதுகள் !

எச்சிலினால் வலை பின்னி 
இரை காணும்    
சிலந்தி !
எனை பார்த்து சிரிக்கிறது 
நம்பிக்கை இல்லாதவன் என ?

நான் ஒரு அறையின் மூலையில் 
முடிச்சுகளோடு 
முரண்பட்டபடி ..........
எழுத்துருவாக்கம் 
கவிஞர் அகரமுதல்வன் 



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.

0 comments: